திருப்பூரில் 9 மாத குழந்தைக்கு அவசரநிலை: தொண்டையில் ஆப்பிள் சிக்கி மூச்சுத்திணறல்
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் அலட்சியம் குற்றச்சாட்டு
மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் 9 மாத குழந்தை தொண்டையில் ஆப்பிள் துண்டு சிக்கி மூச்சுவிட திணறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மடத்துக்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் குழந்தைக்கு, அவன் சகோதரர் ஆப்பிள் துண்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின், அந்த துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்கியதால் சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது.
குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாததாக கூறி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
பின்னர், குழந்தையை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்து, தொண்டையில் சிக்கியிருந்த ஆப்பிள் துண்டை பாதுகாப்பாக அகற்றி குழந்தையின் நிலையை சீராக்கினர்.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.