கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் தேரோட்டம் கோலாகலம்

Date:

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் தேரோட்டம் கோலாகலம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற தேர் திருவிழா

கிராமத்தில் அமைந்துள்ள தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நாள்தோறும் யானை, மயில், காளை வாகனங்களில் குழந்தை வேலப்பர் பவனி வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேர் திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை வேலப்பர் வள்ளி மற்றும் தெய்வானையுடன் எழுந்தருளினார். தேரின் முன்பாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

பின்னர், இரட்டை வடம் பிடித்து “அரோகரா” முழக்கத்துடன் பக்தர்கள் தேரை நான்கு ரத வீதிகளிலும் இழுத்துச் சென்றனர். வழியெங்கும் தேரின் மீது மலர்கள் தூவி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இந்த விழாவில் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமன்றி, பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“அடுத்தவர் குதிரையில் சவாரி” – தவெக தலைவர் விஜயை அதிமுக கடுமையாக விமர்சிப்பு

“அடுத்தவர் குதிரையில் சவாரி” – தவெக தலைவர் விஜயை அதிமுக கடுமையாக...

வெளியூர் செல்லும் போது நகை, பணத்தை பீரோவில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல்துறை எச்சரிக்கை

வெளியூர் செல்லும் போது நகை, பணத்தை பீரோவில் வைக்க வேண்டாம் –...

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன் பாகவத் வலியுறுத்தல்

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன்...

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியீடு

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள்...