வனத்துறை அதிகாரிக்கு மிரட்டல் – கல்குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது
தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு சம்பவம்
, இண்டூர் அருகே வனத்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கல்குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கூடல் பகுதியில் ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரி முருகனிடம் ரத்தினவேல் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்ததுடன் துரத்திச் சென்று தாக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக கல்குவாரி பகுதிக்கு சென்று பணிகளை நிறுத்தி, சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.