திமுக கூட்டணியில் தொடருமா காங்கிரஸ்? – மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
சென்னையில் 18ம் தேதி முக்கியக் கலந்தாய்வு
திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கோரி காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வரும் நிலையில், சமீபத்திய நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஆட்சியில் பங்கு வழங்குவது சாத்தியமற்றது எனத் தெரிவித்தார்.
இந்த கருத்து காங்கிரஸ் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் ஆட்சிப் பங்கு தேவையில்லை என கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், வரும் 18ம் தேதி சென்னை நகரில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர வேண்டுமா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.