தமிழகம்–புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: சென்னையில் ஆலோசனை நடத்திய இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர்
தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்; பல துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம்
மற்றும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சார்பில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்திய துணை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு சென்னையில் ஆலோசனை மேற்கொண்டது.
சில வாரங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் செயல்முறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து பல துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடைபெற்றது. ஏழு பேர் கொண்ட குழுவினர், வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரயில்வே, சி.ஆர்.பி.எஃப்., அஞ்சல் துறை, சிவில் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் இன்று கூடுதல் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் சீராகவும், சட்ட ஒழுங்கு பாதிக்கப்படாமல் நடைபெறவும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.