வீட்டுமனை மோசடி வழக்கு: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை

Date:

வீட்டுமனை மோசடி வழக்கு: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை

மதுரையில் 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மனைகள் தொடர்பாக புகார்; நீதிமன்றம் அனுமதி

மதுரையில் வீட்டுமனை தொடர்பான மோசடி குற்றச்சாட்டில் கைதான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் சீத்தாராமன், ஜெய்பாலாஜி தன்னை ஏமாற்றி ரூ.78 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைகளை கிரையம் செய்து மோசடி செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைக்காக ஜெய்பாலாஜியை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுக்க காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், ஜெய்பாலாஜியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

வழக்கின் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“ஆன்லைன் அபராதம் செல்லாது” – கோவையில் போக்குவரத்து காவலர் நடத்தை குறித்த வீடியோ வைரல்

“ஆன்லைன் அபராதம் செல்லாது” – கோவையில் போக்குவரத்து காவலர் நடத்தை குறித்த...

10 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நாடு தழுவிய போராட்டம் – சென்னை நகரில் பேருந்துகள்

10 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நாடு தழுவிய போராட்டம் – சென்னை...

பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணிக்கு உதவிய இந்திய ராணுவம் – மனிதநேய சேவைக்கு பாராட்டு

பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணிக்கு உதவிய இந்திய ராணுவம் – மனிதநேய சேவைக்கு...

சேலத்தில் 5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேர மது விற்பனை? – பொதுமக்கள் புகார்

சேலத்தில் 5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேர மது விற்பனை?...