மயிலாடுதுறையில் திமுக பொதுக்கூட்டம் – காலி நாற்காலிகள் நடுவே பேசிய கட்சி பேச்சாளர் காட்சி வைரல்
போதிய திரளான மக்கள் வராத நிலையில் உரையாற்றிய நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூட்டத்தில் மக்கள் வருகை குறைவாக இருந்த நிலையில், கட்சி நிர்வாகி ஒருவர் காலியாக இருந்த நாற்காலிகள் நடுவே உரையாற்றிய காட்சிகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனால், கூட்டத்தில் திரளான மக்கள் வராத சூழலில், திமுக பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன் உரையாற்றியதாக கூறப்படுகிறது. அவர் பேசிய போது பல நாற்காலிகள் காலியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றன.