காங்கிரஸ் பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை கோரி குடியரசுத் தலைவருக்கு ஆன்லைன் மனு
நாடாளுமன்ற நடைமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டி, மயிலாடுதுறை மற்றும் கரூர் தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென குடியரசுத் தலைவரிடம் பாஜகவினர் ஆன்லைன் மூலம் மனு அளித்துள்ளனர்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, காங்கிரஸ் எம்பிக்களான ஜோதிமணி மற்றும் சுதா உள்ளிட்டோர் அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மயிலாடுதுறையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர், சம்பந்தப்பட்ட எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி குடியரசுத் தலைவருக்கு இணைய வழியாக புகார் அளித்துள்ளார்.
இந்த மனு தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் விவாதம் உருவாகியுள்ளது.