அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆதரவு
கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10-வது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்ற நயினார் நாகேந்திரன், அங்கன்வாடி பணியாளர்களுடன் கலந்துரையாடினார். சமூக நலத்திற்காக அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் முக்கிய பங்காற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனால் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது.