மகன் திருமணத்திற்கு பிரதமரை அழைத்த சச்சின் டெண்டுல்கர்
தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமண விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து சச்சின் டெண்டுல்கர் அழைப்பு வழங்கினார்.
அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா திருமணம் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருமண நிகழ்வுகள் மார்ச் 3ஆம் தேதி முதல் தொடங்கும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்தித்த சச்சின், திருமண அழைப்பிதழை வழங்கி வாழ்த்து கோரினார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இளம் தம்பதியருக்கு பிரதமர் வழங்கிய வாழ்த்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் – சானியாவின் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தனியார் முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.