“தமிழ்நாட்டில் மட்டும் அதிகாரப் பகிர்வு ஏன் இல்லை?” – பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி
தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே கூட்டணி ஆட்சி அமைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தரவு சரிபார்ப்பு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில், நாட்டின் பல மாநிலங்கள் ஆட்சியில் அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு மட்டும் ஏன் அதிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “சிலர் உருவாக்கியதாகக் கூறப்படும் தனித்துவ அரசியல் முகமூடியின் பின்னால் தொடர்ந்து மறைந்து இருப்பது தேவையா?” என்றும் அவர் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.