சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு – துணைத் தேர்தல் ஆணையர் தமிழகத்திற்கு வருகை
வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்வதற்காக, இந்திய துணைத் தேர்தல் ஆணையர் இன்று தமிழகம் வர உள்ளார்.
தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் உருவாக்கப் பணிகள் மற்றும் தேர்தல் தொடர்பான முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு இன்று சென்னைக்கு வருகை தருகிறார்.
இந்தப் பயணத்தின் போது, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட அதிகாரிகளுடன், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.