ஜப்பான் தேர்தல்: சனே தகாய்ச்சி தலைமையிலான எல்டிபி மீண்டும் அதிகாரம் பெறும் – கருத்துக்கணிப்பு
ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையிலான லிபரல் டெமோக்ராடிக் கட்சி (LDP) மீண்டும் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பதவியேற்ற சனே தகாய்ச்சி, தமக்குக் கிடைத்த அரசியல் ஆதரவினை அடிப்படையாகக் கொண்டு ஆளும் கட்சியின் பலத்தை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டார். அதற்காக தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே ஜப்பான் நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜப்பான் நாடாளுமன்றத்தின் 465 உறுப்பினர் இடங்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் படி, சனே தகாய்ச்சி தலைமையிலான எல்டிபி கட்சியும், அதன் கூட்டணி கட்சியான ஜப்பான் இனோவேஷன் கட்சியும் இணைந்து 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.