சிங்கப்பூரில் உற்சாகமாக நடைபெற்ற விமானக் கண்காட்சி – பொதுமக்கள் திரளாகக் கண்டு மகிழ்ச்சி
சிங்கப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட விமானக் கண்காட்சியை ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி, உலகளாவிய விண்வெளி மற்றும் விமானத் துறையின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு, நடப்பு ஆண்டில் சாங்கி கண்காட்சி வளாகத்தில் கடந்த 3ஆம் தேதி ஆரம்பித்து ஆறு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் F-16C வகை போர்விமானம், AH-64D அபாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர், சீனாவில் தயாரிக்கப்பட்ட C919 மற்றும் C909 வணிக விமானங்கள் உள்ளிட்டவை வானில் பறந்து திகட்டாத சாகசக் காட்சிகளை வழங்கின.
வானை அதிரவைக்கும் இந்த அற்புத விமான சாகசங்கள், பார்வையாளர்களை வியப்பிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தின.