என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – டிடிவி தினகரன் நம்பிக்கை
வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 200-க்கும் அதிகமான சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், என்டிஏ கூட்டணியின் வெற்றி உறுதியானது என்றும், தேர்தலில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என்றும் கூறினார். அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் பல அரசியல் கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பமும் ஒருமித்த கருத்தின்மையும் நிலவுகிறது என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணி தெளிவான பாதையில் பயணிக்கிறது என்றும் தினகரன் தெரிவித்தார்.
சமீப காலத்தில் உருவான சில அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் நிறுத்தக் கூட வேட்பாளர்கள் இல்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.