புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம்
தமிழகத்தில் நிலுவையில் உள்ள புதிய திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் எனக் கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ரயில்வே பணிகளுக்கான நிதி விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இடைநிறுத்தப்பட்டுள்ள முக்கிய ரயில் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய ரயில்வே திட்டங்களை தொடங்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சுமார் 2,500 ஹெக்டேர் பரப்பளவு நிலங்களை கையகப்படுத்த மாநில அரசு தயாராக இருப்பதாகவும், அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்