திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் காரணமாக ஸ்டாலின் பதற்றமான சூழலில் தேர்தலை எதிர்கொள்கிறார் – நிர்மலா சீதாராமன்
திமுக அமைச்சர்களின் அண்மைய செயல்பாடுகள் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க நேரிடும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான சவாலை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையான ஒற்றுமையுடனும், வலிமையுடனும் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், திமுக இதுவரை பழகிய வழக்கமான அரசியல் பாணியில் இந்த தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஓராண்டு காலமாக திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளதாகவும், அதன் விளைவாக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலை மனஅழுத்தத்துடன் எதிர்கொள்கிறார் என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
மேலும், தென் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.