கும்பாபிஷேக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – தவிப்பில் சிக்கிய அமைச்சர்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பெரியகருப்பன், கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சங்கடத்தை சந்தித்தார்.
ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் 36 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறப்பான கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார்.
விழா நடைபெற்ற போது காவல்துறையினர் போதிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளாததால், கூட்டத்தில் அமைச்சர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்கிருந்த போலீசார் அவரை பாதுகாப்பாக மீட்டு, சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.