போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா!

Date:

போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள போதமலை பகுதிக்கு அமைக்கப்படும் சாலைப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரமாக திறப்பு விழா நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராசிபுரத்தை அடுத்த போதமலையில் கெடமலை, கீழூர், மேலூர் என மூன்று கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால் தற்போது வரை சாலைப் பணிகள் சுமார் 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 40 சதவீத பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், முழுமையடையாத போதமலை சாலையை முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலம் நெருங்கி வருவதாலும், கல்வெட்டில் பெயர் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தாலும், திமுக அரசு அவசர அவசரமாக சாலையை திறந்து வைத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு

நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு மத்திய...

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு செயற்கை நுண்ணறிவு துறையில்...

வெளிநாட்டு சிறையில் உள்ள சகோதரரை விடுவிக்க பிரதமரிடம் நடிகை செலினா ஜெட்லி வேண்டுகோள்

வெளிநாட்டு சிறையில் உள்ள சகோதரரை விடுவிக்க பிரதமரிடம் நடிகை செலினா ஜெட்லி...

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா – பக்தர்களுக்காக வசதிகளை ஏற்படுத்தும் இலங்கை கடற்படை

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா – பக்தர்களுக்காக வசதிகளை ஏற்படுத்தும்...