கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா – பக்தர்களுக்காக வசதிகளை ஏற்படுத்தும் இலங்கை கடற்படை
கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, இலங்கை கடற்படை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த திருவிழாவில், இலங்கையைச் சேர்ந்த பக்தர்களுடன் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனை முன்னிட்டு, திருவிழாவுக்கு வரும் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு குடிநீர் வசதி, கழிப்பிடங்கள், மின்சார ஏற்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இலங்கை கடற்படை செய்து வருகிறது.
மேலும், பக்தர்கள் பயணிக்கும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக கடற்கரையோரங்களில் தற்காலிக நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.