கள் வர்த்தகத்துக்கு தடையிட்டு, மதுபான விற்பனைக்கு அனுமதி – அரசின் இரட்டை நிலைப்பாடு ஏன்?
கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, மதுபானங்களை மட்டும் விற்பனை செய்ய அனுமதிப்பது ஏன் என்ற கேள்வியை, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.கே. சண்முகம் எழுப்பியுள்ளார்.
நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை எழும்பூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் 500-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன