திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

Date:

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

மதுரையில் நடைபெற உள்ள என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மண்டேலா நகரில் பிப்ரவரி 28ஆம் தேதி என்டிஏ சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நயினார் நாகேந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அறிவித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் 70 வாக்குறுதிகள் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், திமுக–காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது என கூறப்படுகிற நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என அவர் கேள்வி எழுப்பினார்.

அதேபோல், தவெக (TAVEGAM) அமைப்புடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபருக்கு ஆயுள் சிறை

டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபருக்கு ஆயுள் சிறை அமெரிக்க முன்னாள்...

தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாரபட்சம் – சீனா மீது குற்றச்சாட்டு

தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாரபட்சம் – சீனா மீது குற்றச்சாட்டு ஆசிய...

தொடர்ச்சியான அழுத்தங்கள் – காங்கிரஸ் கூட்டணியை விலக்க திமுக ஆலோசனை என தகவல்

தொடர்ச்சியான அழுத்தங்கள் – காங்கிரஸ் கூட்டணியை விலக்க திமுக ஆலோசனை என...

வேலைக்கு செல்ல அறிவுறுத்திய தாய் – ஆத்திரத்தில் மகன் கொடூர செயல்

வேலைக்கு செல்ல அறிவுறுத்திய தாய் – ஆத்திரத்தில் மகன் கொடூர செயல் சென்னை...