பரபரக்கும் அரசியல் களம்: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக

Date:

பரபரக்கும் அரசியல் களம்: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது திராவிட முன்னேற்ற கழகம்

நடைபெற உள்ள 17வது சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் 2021ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த கட்சிகள் பெரும்பாலும் மீண்டும் இணைந்துள்ளன. கூடுதலாக, மக்கள் நீதி மய்யம் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவை கூட்டணியில் இணைந்துள்ளன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக திமுக சார்பில் டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. முதல் நாளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது அதிகாரப்பூர்வ கலந்துரையாடல் என்றாலும், முன்பே மூத்த அமைச்சர்கள் தனித்தனியாக ஒவ்வொரு கட்சியுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால், இன்றைய அதிகாரப்பூர்வ சந்திப்பில் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து பெறப்படலாம் என கூறப்படுகிறது. திமுகவிடம் 5 தொகுதிகளை கோர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானித்துள்ளதாக தகவல் உள்ளது.

மதிமுகவுடன் நாளை பேச்சு:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உடன் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கோர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மனிதநேய மக்கள் கட்சி உடனும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
வரும் 26ஆம் தேதி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக கலந்துரையாட உள்ளது. இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கோர மார்க்சிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:
27ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இவர்களும் இரட்டை இலக்க தொகுதிகளை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய தேசிய காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கூட்டணி கட்சிகள் பெரும்பாலும் இரட்டை இலக்க தொகுதிகளை கோருவதால், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன என்பது தெளிவாகும். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

சாத்தியமான தொகுதி ஒதுக்கீடு:
இந்த முறை திமுக கூட்டணியில், காங்கிரஸ் – 28, தேமுதிக – 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 6, இந்திய கம்யூனிஸ்ட் – 6, மதிமுக – 6, விடுதலை சிறுத்தைகள் – 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 3, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு – 2, மனிதநேய மக்கள் கட்சி – 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 1, தமிழக வாழ்வுரிமைக் கட்சி – 1 என ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 167 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

145 ஆண்டுகாலக் காத்திருப்பு: உலகின் மிக உயரமான தேவாலயமாகச் சாதனை படைத்தது சாக்ரடா ஃபேமிலியா!

145 ஆண்டுகாலக் காத்திருப்பு: உலகின் மிக உயரமான தேவாலயமாகச் சாதனை படைத்தது...

“பெண் சக்தியின் உருவாக விளங்கியவர்” – ஜெயலலிதாவுக்கு நரேந்திர மோடி பாராட்டு

“பெண் சக்தியின் உருவாக விளங்கியவர்” - ஜெயலலிதாவுக்கு நரேந்திர மோடி பாராட்டு பிரதமர்...

“இரண்டு குதிரையில் சவாரி செய்பவர்கள்”: தேமுதிகவைச் சாடிய பொள்ளாச்சி ஜெயராமன்!

"இரண்டு குதிரையில் சவாரி செய்பவர்கள்": தேமுதிகவைச் சாடிய பொள்ளாச்சி ஜெயராமன்! பொள்ளாச்சி அருகே...

நேர்மைக்குக் கிடைத்த ஹெலிகாப்டர் பயணம்: 45 சவரன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவிற்குச் சிறப்பு கௌரவம்!

நேர்மைக்குக் கிடைத்த ஹெலிகாப்டர் பயணம்: 45 சவரன் நகையை ஒப்படைத்த தூய்மைப்...