திமுக தலையீட்டால் கன்யாகுமரியில் சீரமைப்பு வேலைகள் இடைநிறுத்தம்?
கன்யாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள், திமுகவினரின் தலையீட்டால் நடுவே நிறுத்தப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மார்த்தாண்டம் – ஆற்றூர் பிரதான சாலையோரத்தில் உள்ள கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், மழைக்கால நீரும் அருகிலுள்ள ஓடையில் தேங்கி வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த ஓடையில் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் உருவானது.
இதையடுத்து, உடைப்பை அகற்றி சீரமைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், எதிர்பாராத விதமாக அந்தப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலைக்கு திமுகவினரின் அழுத்தமே காரணம் என அப்பகுதி குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.