நிலக்கோட்டை அருகே தாய்மாமன் வழங்கிய பிரம்மாண்ட சீர்வரிசை – ஊரையே வியக்க வைத்த நிகழ்வு

Date:

நிலக்கோட்டை அருகே தாய்மாமன் வழங்கிய பிரம்மாண்ட சீர்வரிசை – ஊரையே வியக்க வைத்த நிகழ்வு

நிலக்கோட்டை அருகே நடைபெற்ற காதணி நிகழ்ச்சியில், தாய்மாமன் சார்பில் 20 மாட்டுவண்டிகளில் 200-க்கும் அதிகமான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் – மாலியபுரம் தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில், அவர்களுக்காக காதணி விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவை முன்னிட்டு, சகோதரியின் குழந்தைகளுக்காக தாய்மாமன் வேல்முருகன், 20 மாட்டுவண்டிகளில் ஏற்றப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு சென்றார்.

தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் நடனம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன், இருசக்கர வாகனம், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் அணிவகுப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த காதணி விழாவில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பில் கேட்ஸ் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – மெலிண்டா கேட்ஸ் அதிர்ச்சி

பில் கேட்ஸ் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – மெலிண்டா கேட்ஸ்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் – ஆயிரக்கணக்கான...

செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி ரோவர்

செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி...

கல்லூரி மாணவி வசிக்கும் இல்லத்தில் அமலாக்கத் துறை திடீர் சோதனை

கல்லூரி மாணவி வசிக்கும் இல்லத்தில் அமலாக்கத் துறை திடீர் சோதனை தாம்பரம் அருகே...