சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 46-வது பட்டமளிப்பு விழா கோலாகலம்
சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 46-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். விழாவின் முக்கிய அம்சமாக, ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி அவர்களை கௌரவித்தார்.
விழாவில் உரையாற்றிய மயில்சாமி அண்ணாதுரை, விரும்பியதைப் பெறுவதையே வெற்றியாகக் கருதக் கூடாது என்றும், கிடைத்ததை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால் வெற்றி உறுதியானது என்றும் கூறினார். மேலும், மாணவர்கள் அச்சத்தை ஒதுக்கி வைத்து, தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக உணர்ந்து முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்