உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான்
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, சென்னை அடையார் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது.
அடையார் புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், காவல் உதவி ஆணையர் வல்லவன், மருத்துவ நிபுணர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மனித சங்கிலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் உதவி ஆணையர் வல்லவன், புற்றுநோய் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும், தைரியமாக எதிர்கொண்டால் அதை வெல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.