புதுச்சேரியில் “SAGA OF RSS” தலைப்பில் கருத்தரங்கு – தத்தாத்ரேய ஹோசபாளே சிறப்புரை
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, புதுச்சேரியில் “SAGA OF RSS” (சாகா ஆஃப் ஆர்.எஸ்.எஸ்) என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளரும் மூத்த தலைவருமான தத்தாத்ரேய ஹோசபாளே முக்கிய விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
அவரது உரையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு காலப் பயணம், சமூக நலச் செயல்பாடுகள், நாட்டை உருவாக்குவதில் அமைப்பு ஆற்றிய பங்களிப்பு மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
புதுச்சேரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் அரவிந்தன் மற்றும் நகர தலைவர் தங்கதரன் ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில், ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.