சேலத்தில் ஜீவசமாதி முயற்சிக்கு அனுமதி மறுப்பு – பிரம்மச்சாரியர் உயிரிழப்பு, பரபரப்பு
சேலத்தில் ஜீவசமாதி அடைய அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில், சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அரியானூர் அருகே கஞ்சமலை அடிவாரத்தில், சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் 101 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளிட்ட பல்வேறு தெய்வச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி ஜீவசமாதி அடைய உள்ளதாக சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியர் அறிவித்திருந்தார். ஆனால், அவரது முடிவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால், ஆசிரமப் பகுதியில் போலீசார் தொடர்ச்சியான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், அதிகாலை நேரத்தில் அவர் உடல்நலக்குறைவு அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலை 10 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.