• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

ஒரே மேடையில் தமிழ்நாட்டு நாய் இனங்களும் வெளிநாட்டு இனங்களும் – மயிலாப்பூரில் நடந்த நாய் கண்காட்சி கவனம் ஈர்ப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 3, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 4.2K 🔥

ஒரே மேடையில் தமிழ்நாட்டு நாய் இனங்களும் வெளிநாட்டு இனங்களும் – மயிலாப்பூரில் நடந்த நாய் கண்காட்சி கவனம் ஈர்ப்பு

தமிழ்நாட்டின் பாரம்பரிய நாய் இனங்களும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு நாய் இனங்களும் ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட நாய் கண்காட்சி, சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்த கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வியப்பில் ஆழ்த்தியது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த செல்லப்பிராணிகள் கண்காட்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட நாய் இனங்கள் இடம் பெற்றன. மொத்தமாக 408-க்கும் அதிகமான நாய்கள் இதில் பங்கேற்றன.

இந்த கண்காட்சியில் பெல்ஜியன் மெல்லினாய்ஸ், டோபர்மேன், பீகில், ராட்வீலர், பொமேரியன், சைபீரியன் ஹஸ்கி, பிட்புல், கிரேட் டேன் உள்ளிட்ட பிரபல வெளிநாட்டு நாய் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் சொந்த இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி மற்றும் கோம்பை நாய்கள் முதல்முறையாக சிறப்பு கவனத்துடன் மேடையேற்றப்பட்டன.

நாய்களின் நடத்தை, கீழ்ப்படிதல் திறன், நடை அழகு, உடல் அமைப்பு, பராமரிப்பு, சிகை அலங்காரம் போன்ற பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த கண்காட்சியில் இந்தியா மட்டுமல்லாமல், ருமேனியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நடுவர்கள் பங்கேற்று, வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய நாய் இனங்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை ஆகியவற்றை உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாய் இனங்களாக கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த கண்காட்சி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்தியாவின் நாட்டு நாய்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே இத்தகைய கண்காட்சிகளை தொடர்ந்து நடத்துவதற்கான முக்கிய நோக்கம் என்றும் அவர்கள் விளக்கினர்.

RelatedPosts

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

மார்ச் 22, 2026

தமிழ்நாட்டின் இந்நாட்டு நாய் இனங்கள் வேட்டைக்காக மட்டுமல்லாமல், வெளிநாட்டு இனங்களை விட நீண்ட ஆயுள் கொண்டவையாகவும், குறைந்த செலவில் பராமரிக்கக் கூடியவையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக பராமரிப்பு தேவையில்லாத இந்நாட்டு இனங்கள் தற்போது உலக அளவில் மெதுவாக பிரபலமடைந்து வருகின்றன.

இந்நிலையில், நாட்டு நாய் இனங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் வெளிநாட்டு நாய்களுக்கு வழங்கப்படும் போன்று சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ வசதிகள் போதிய அளவில் இல்லை என்பது வருத்தமளிப்பதாக நாய் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நாட்டு நாய்களுக்கான மருத்துவ வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்றும், கடந்த பத்து ஆண்டுகளாக மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் நாட்டு நாய் இனங்களை அரசு உதவி இல்லாமல் உரிமையாளர்களே பாதுகாக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த கண்காட்சியில் இந்திய நாட்டு நாய்களுடன் சேர்ந்து, ரஷ்யன் ப்ரீட் வகைகள், இங்கிலீஷ் செட்டர், ஜாக் டெரியர் போன்ற வெளிநாட்டு நாய் இனங்களும் காட்சியளித்து பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

INDI கூட்டணிக்கு தொடரும் பின்னடைவு – 100-வது தோல்வி நெருங்குகிறது: பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா

Next Post

மாமல்லபுரத்தில் சர்வதேச சுற்றுலா உச்சி மாநாடு – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

RelatedPosts

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

மார்ச் 22, 2026
பாலியல் தொந்தரவால் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: சேலத்தில் திருமணமான இளைஞர் கைது!

பாலியல் தொந்தரவால் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: சேலத்தில் திருமணமான இளைஞர் கைது!

மார்ச் 22, 2026
சென்னையில் பண்ணிசைப் பெருவிழா: தமிழ் இசை மரபையும், ஓதுவார் பாரம்பரியத்தையும் போற்றும் விஜில் அமைப்பு!

சென்னையில் பண்ணிசைப் பெருவிழா: தமிழ் இசை மரபையும், ஓதுவார் பாரம்பரியத்தையும் போற்றும் விஜில் அமைப்பு!

மார்ச் 22, 2026
“டெல்லி என்றாலே முதலமைச்சருக்கு நடுக்கம்”: நயினார் நாகேந்திரன் நெல்லையில் அதிரடி விமர்சனம்!

“டெல்லி என்றாலே முதலமைச்சருக்கு நடுக்கம்”: நயினார் நாகேந்திரன் நெல்லையில் அதிரடி விமர்சனம்!

மார்ச் 22, 2026
Next Post
Home

மாமல்லபுரத்தில் சர்வதேச சுற்றுலா உச்சி மாநாடு – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

Home

மாம்பழம் சின்னம் தொடர்பான விவகாரம் – தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!

1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!

மார்ச் 22, 2026
“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!
  • “மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!
  • பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.