தேனியில் பகல் நேர கொலை – நபர் வெட்டி உயிரிழப்பு; மர்ம நபர்களின் கொடூரச் செயல்
தேனி பகுதியில் பகல் நேரத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனியைச் சேர்ந்த பழக்கடை பாண்டி என்ற நபர், ஃபைனான்ஸ் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் தனது வீட்டிலிருந்து வெளியேறிய சமயத்தில், அங்கு காத்திருந்த அடையாளம் தெரியாத சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர்.
அந்த மர்ம நபர்கள், பாண்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். எதிர்பாராத இந்த தாக்குதலில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாண்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.







