மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்புகள்
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் மற்றும் அஸ்தினாபுரம் உள்ளிட்ட நாடு முழுவதும் 15 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கலாச்சார மையங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
அதேபோல், தமிழகத்தில் உள்ள பொதிகை மலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலையேற்ற சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறினார். இதே திட்டத்தின் கீழ் உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு–காஷ்மீர் மாநிலங்களிலும் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும் எனவும், பழவேற்காடு ஏரியில் பறவைகள் பார்வையிடும் சுற்றுலாவை வளர்க்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.