வடலூரில் ஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக!
கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா வருடந்தோறும் போலவே வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இவ்விடத்தில், 155வது ஜோதி தரிசனம் காலை 6 மணிக்கு ஏழு திரைகள் விலக்கி முதல் தரிசனம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதியை வழிபட்டனர்.
தொடர்ந்து, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் ஜோதி தரிசனங்கள் நடைபெறவுள்ளது.
பாதுகாப்புக்காக ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.