சென்னை அடையாறு மும்முர கொலை சம்பவம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை – 5 பேர் கைது

Date:

சென்னை அடையாறு மும்முர கொலை சம்பவம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை – 5 பேர் கைது

சென்னை அடையாறு பகுதியில் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அடையாறில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் என்பவர், தனது மனைவி புனிதா குமாரி மற்றும் சிறுமி குழந்தையுடன் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கவுரவ் குமாரின் மனைவி புனிதா குமாரியை, அதே மாநிலத்தைச் சேர்ந்த சிலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய கவுரவ் குமாரை, அந்த கும்பல் கொலை செய்து, அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி இந்திரா நகர் சாலையில் கடந்த திங்கட்கிழமை வீசி சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கவுரவ் குமாரின் மனைவி புனிதா குமாரி மற்றும் அவரது மகளையும் அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையின் உடல் பக்கிங்காம் கால்வாயில் வீசப்பட்டதாகவும், புனிதா குமாரியின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த மூவர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தையின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில், புனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீவிரமாக தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்கும்?

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்கும்? மத்திய...

தரமற்ற உணவால் ஏன் விளம்பர நாடகம்? – அண்ணாமலை குற்றச்சாட்டு

தரமற்ற உணவால் ஏன் விளம்பர நாடகம்? – அண்ணாமலை குற்றச்சாட்டு தமிழகத்தின் தூய்மைப்...

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து வணங்கிய மாணவி!

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து வணங்கிய மாணவி! சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற...

அமெரிக்காவின் தலையீடு: உக்ரைனில் ரஷ்யா-போர் தற்காலிக இடைநிறுத்தம்

அமெரிக்காவின் தலையீடு: உக்ரைனில் ரஷ்யா-போர் தற்காலிக இடைநிறுத்தம் உக்ரைனில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக,...