குடியரசு தின விழா கொண்டாட்டம்: பல்வேறு இடங்களில் ஜொலிக்கும் மூவர்ணக் கொடி
குடியரசு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அரசு கட்டடங்கள் தேசிய மூவர்ணக் கொடி நிறங்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மூவர்ணக் கொடி நிறங்களில் ஒளிரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், பொதுப்பணித்துறை தலைமையகம், ஜிஎஸ்டி அலுவலகம் உள்ளிட்ட நகரின் முக்கிய கட்டடங்களும் மின்விளக்குகள் ஒளியில் பிரகாசித்தன.
இதேபோல், சென்னை மாநகராட்சி கட்டடமும் தேசிய கொடி நிறங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு கண்கவர் காட்சியாக இருந்தது. மேலும், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய கட்டடமும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த அலங்காரங்களை காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் தேசபக்தி உணர்வு உற்சாகமாக வெளிப்பட்டது.