நாள் முழுவதும் குடியரசு தினம் கொண்டாட்டம் – மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் R.N. ரவி
நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதன்படி, சென்னை மெரினா கடற்கரையில், ஆளுநர் R.N. ரவி தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர் மற்றும் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
குடியரசு தினத்தையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.