குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம்–புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு மத்திய அரசின் விருதுகள்
குடியரசு தினத்தை ஒட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளில் பணியாற்றும் 33 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
காவல்துறையில் சிறந்த சேவையை வழங்கியதற்காக,
தமிழகத்தைச் சேர்ந்த
ஐஜி மகேஸ்வரி,
எஸ்பி அன்வர் பாஷா,
டிஎஸ்பி குமாரவேலு
ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சீர்திருத்தப் பணித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தலைமை வார்டர் சேதுராமன் மற்றும் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் கோதண்ட ராம் சிந்தா ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக காவல்துறையில் குறிப்பிடத்தக்க முறையில் சேவையாற்றிய 21 பேருக்கு,
“தகைசால் பணிக்கான விருது” வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.