குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
குடியரசு தின விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வரும் 26ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை சாலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, 26ஆம் தேதி காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் நிறைவடையும் வரை, காமராஜர் சாலையில் காந்தி சிலையிலிருந்து போர் நினைவுச் சின்னம் வரையிலான பகுதிக்கு அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படாது.
அடையாறில் இருந்து பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள், கிரீன்வேஸ் சாலை வழியாக அண்ணா சாலையை பயன்படுத்தி செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராட்வேக்கு செல்லும் பிற வாகனங்கள், காந்தி சிலை சந்திப்பில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை வழியாக ராயப்பேட்டை நோக்கி திருப்பி விடப்படும்.
மேலும், மயிலாப்பூர், நடேசன் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதைகளுக்கு வழிமாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு, பாரிமுனையிலிருந்து அடையாறு செல்லும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையை தவிர்த்து, வடக்கு துறைமுகச் சாலை வழியாக செல்லுமாறு போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.