விரதம் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி புற்றுநோய் செல்களை அழிக்கும் – ஆயுர்வேத மருத்துவர்கள் விளக்கம்
விரதம் மேற்கொண்டால் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பட்டு, சேதமடைந்த செல்களையும் புற்றுநோய் செல்களையும் தானாகவே அழிக்கத் தொடங்கும் என அப்போலோ ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இடுப்பு எலும்பில் ஏற்பட்ட ரத்த ஓட்ட குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்தியுள்ளதாக அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சிகிச்சை முறைகள் குறித்து அப்போலோ ஆயுர்வேத மருத்துவமனையின் துணை முதன்மை மருத்துவர் அஜித் குமார் விவேகானந்தன் மற்றும் மருத்துவர் ஸ்மிதா ஜயதேவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் விரிவாக விளக்கம் அளித்தனர்.
அப்போது, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்திருந்தது போல, விரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் அழியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அஜித் குமார் விவேகானந்தன், விரதம் மேற்கொள்ளும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பாதிக்கப்பட்ட செல்களையும் புற்றுநோய் செல்களையும் அழிக்கும் செயல்பாட்டை தொடங்கும் என கூறினார். இது அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உண்மை என்றும் அவர் குறிப்பிட்டார்.