புதுப் பாம்பன் தூக்கு பாலம் வழியாக கப்பல்கள் வெற்றிகரமாக கடந்து சென்றன
ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம் வழியாக சுற்றுலா கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்கள் பயணித்தன.
பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பாலம் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், முதன்முறையாக கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. கொச்சியில் இருந்து அந்தமான் தீவுகளுக்கும், மங்களூரில் இருந்து கடலூருக்கும் செல்லும் கப்பல்கள் இந்த பாலத்தின் கீழ் கடந்து சென்றன.
கப்பல்கள் செல்லும் வகையில் பாலம் செங்குத்தாக உயர்த்தப்பட்ட காட்சியும், அதன் வழியாக கப்பல்கள் சென்ற தருணமும் அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது. அவர்கள் இந்த அரிய காட்சியை கண்டு மகிழ்ச்சியுடன் ரசித்தனர்.