மதுரை LIC அலுவலக தீ விபத்து: விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என அதிர்ச்சி தகவல்

Date:

மதுரை LIC அலுவலக தீ விபத்து: விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என அதிர்ச்சி தகவல்

மதுரை எல்.ஐ.சி அலுவலகத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்ட தீ விபத்து சம்பவம், உண்மையில் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மதுரை மேலபெருமாள் மேஸ்திரி தெருவில் அமைந்துள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் கடந்த மாதம் 17ஆம் தேதி திடீரென தீப்பற்றியது. இந்த சம்பவத்தில், மூத்த கிளை மேலாளராக பணியாற்றிய கல்யாணிநம்பி தீயில் சிக்கி உயிரிழந்தார். அதே நேரத்தில், உதவி நிர்வாக அதிகாரியான ராம் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, காயமடைந்த ராம் மீது சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன.

ராமின் பணியுடன் தொடர்புடைய சில ஆவணங்களில் முறைகேடுகள் இருப்பதை கல்யாணிநம்பி கண்டுபிடித்ததாகவும், அது குறித்து அவர் ராமை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி வந்ததாகவும் தெரியவந்தது. இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில், ராம் முக்கிய ஆவணங்களை தீயிட்டு அழிக்க முயன்றுள்ளார்.

இதற்கிடையில், முறைகேடு குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்க கல்யாணிநம்பி முயன்றதை அறிந்த ராம், கடும் ஆத்திரத்தில் அவர்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொலை செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில், ராமை கைது செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மேட்டுப்பாளையம் தென் திருப்பதி கோயிலில் அண்ணாமலை சாமி தரிசனம்: பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கி வழிபாடு!

மேட்டுப்பாளையம் தென் திருப்பதி கோயிலில் அண்ணாமலை சாமி தரிசனம்: பசுக்களுக்கு அகத்திக்கீரை...

இந்தியா – பின்லாந்து உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி – அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் சந்திப்பு!

இந்தியா - பின்லாந்து உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி -...

கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் இருளில் மூழ்கிய மாகாணங்கள் – அமெரிக்கா மீது அந்நாட்டு அரசு குற்றச்சாட்டு!

கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் இருளில் மூழ்கிய மாகாணங்கள் - அமெரிக்கா மீது...

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: ₹10 கோடி மதிப்புள்ள சரக்குகள் பறிமுதல் – 7 பேர் கைது!

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: ₹10 கோடி மதிப்புள்ள சரக்குகள் பறிமுதல்...