கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி உயிரிழப்பு
சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர், கட்சி அலுவலகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில், சுகுமார் என்பவர் சால்வையால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.