பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகை, மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செயல்பட்டு வரும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், வரும் 23ஆம் தேதி சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மிகப் பிரம்மாண்டமான பொங்கல் விழா மற்றும் மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்