மேற்கு வங்கம் – தமிழகம் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை!
தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் இடையேயான புதிய அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை அனுமதி வழங்கியுள்ளது.
வெளியான அட்டவணையின் படி, தாம்பரத்திலிருந்து சந்திரகாச்சி வரை, ஜல்பாய்குரி ரயில் நிலையத்திலிருந்து திருச்சி வரை, அதேபோல் நாகர்கோவிலில் இருந்து ஜல்பாய்குரி வரை புதிய அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுடன், அசாம் – மேற்கு வங்கம் இடையே முதல்முறையாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவைகளை வரும் 17 மற்றும் 18 தேதிகளில் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.