நெல்லை பணகுடியில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் தாக்குதல் – சிகிச்சை பலனின்றி மரணம்

Date:

நெல்லை பணகுடியில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் தாக்குதல் – சிகிச்சை பலனின்றி மரணம்

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் அரிவாளால் தாக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணகுடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் லட்சுமணன், அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 5ஆம் தேதி, அதே பகுதியில் வசித்து வரும் சபரிராஜன் என்பவரின் இல்லத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, திடீரென சபரிராஜன் அரிவாளைக் கொண்டு லட்சுமணனை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமணன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சபரிராஜன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மக்கள் மத்தியில் காணப்படும் ஆதரவு தேர்தல் வாக்குகளாக மாறுமா என்பது உறுதியில்லை… காங்கிரஸ்

மக்கள் மத்தியில் காணப்படும் ஆதரவு தேர்தல் வாக்குகளாக மாறுமா என்பது உறுதியில்லை...

தலையை மறைத்து திமுக அரசுக்கு எதிராக பெண்கள் வித்தியாசமான எதிர்ப்பு போராட்டம்

தலையை மறைத்து திமுக அரசுக்கு எதிராக பெண்கள் வித்தியாசமான எதிர்ப்பு போராட்டம் சிவகங்கை...

கிரிக்கெட் வீரர் அர்ஜூன் டெண்டுல்கருக்கு மார்ச்சில் திருமண ஏற்பாடுகள்?

கிரிக்கெட் வீரர் அர்ஜூன் டெண்டுல்கருக்கு மார்ச்சில் திருமண ஏற்பாடுகள்? இந்திய கிரிக்கெட் உலகின்...

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் விழா – அனுமதி டிக்கெட் கள்ள விற்பனை ரூ.11,000… காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் விழா – அனுமதி டிக்கெட் கள்ள விற்பனை ரூ.11,000…...