20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திமுக – புதிய அணை ஒன்றையும் அமைக்கவில்லை : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

Date:

20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திமுக – புதிய அணை ஒன்றையும் அமைக்கவில்லை : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் உதவி பெற்று வந்த விவசாயிகளின் எண்ணிக்கை, 40 லட்சத்திலிருந்து 20 லட்சமாக சரிந்ததற்கு மாநில அரசின் செயல்பாடுகளே காரணம் என மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை மாநாட்டில் பங்கேற்ற அவர், பின்னர் உரையாற்றினார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் அடித்தளமாக இருப்பதாக கூறினார். குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே பிரதமரின் முக்கிய நோக்கம் என்றும், அதற்காக எந்த அளவிலான முயற்சியையும் மேற்கொள்ள அவர் தயங்குவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மாநிலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என விமர்சித்த அவர், கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக அரசு ஒரு புதிய அணையைக் கூட அமைக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மகாராஷ்டிராவில் பிரம்மாண்ட சாதனை: 2,432 பெண்கள் இணைந்து ஆடிய ‘லாவணி’ நடனம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது!

மகாராஷ்டிராவில் பிரம்மாண்ட சாதனை: 2,432 பெண்கள் இணைந்து ஆடிய 'லாவணி' நடனம்...

திருமணத்திற்குப் பின் சொந்த ஊர் வருகை: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதிக்கு உற்சாக வரவேற்பு!

திருமணத்திற்குப் பின் சொந்த ஊர் வருகை: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா...

இன்று மாலை அபூர்வ சந்திர கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம் – விஞ்ஞானிகள் தகவல்!

இன்று மாலை அபூர்வ சந்திர கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம் -...

“இனியாவது திருந்துமா திமுக அரசு?” – திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் காட்டம்!

"இனியாவது திருந்துமா திமுக அரசு?" - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நயினார்...