சம பணிக்கு சம சம்பளம் கோரி 7-ஆவது நாளாக தொடர் போராட்டம்

Date:

சம பணிக்கு சம சம்பளம் கோரி 7-ஆவது நாளாக தொடர் போராட்டம்

சம பணிக்கு சம சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,180 இடைநிலை ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நகரில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் திரண்டு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆசிரியர்களை குழுக்களாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த சூழலில், போராட்டத்தில் கலந்து கொண்ட 1,180 இடைநிலை ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனுமதி பெறாமல் கூட்டம் கூடுதல், பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கும்பகோணத்தில் அதிசயம்: 51 அடி உயர 65 டன் எடையுள்ள பஞ்சலோக அம்மன் சிலை சேலத்திற்குப் பயணம்!

கும்பகோணத்தில் அதிசயம்: 51 அடி உயர 65 டன் எடையுள்ள பஞ்சலோக...

திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயில் உண்டியல் உடைப்பு: நகை மற்றும் பணம் கொள்ளை!

திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயில் உண்டியல் உடைப்பு: நகை மற்றும் பணம்...

எல்லை மீறிய பதற்றம்: ஆப்கானிஸ்தானுடன் ‘நேரடிப் போர்’ பிரகடனம் செய்தது பாகிஸ்தான்!

எல்லை மீறிய பதற்றம்: ஆப்கானிஸ்தானுடன் ‘நேரடிப் போர்’ பிரகடனம் செய்தது பாகிஸ்தான்! இஸ்லாமாபாத்:...