திருச்சியில் அமித்ஷா பங்கேற்கும் “நம்ம ஊரு மோடி” பொங்கல் விழா – பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள உள்ள “நம்ம ஊரு மோடி” பொங்கல் விழா முன்னேற்பாடாக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மன்னார்புரம் பகுதியில் அமைந்துள்ள ராணுவ மைதானத்தில், வரும் 5-ஆம் தேதி இந்த பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா முக்கிய விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில், விழாவுக்கான அடையாளமாக நடைபெற்ற பந்தக்கால் நடும் நிகழ்ச்சி, பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊடகங்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மிகப் பெரிய அளவிலான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.