திமுக நிர்வாகத்தில் மக்கள் பாதுகாப்பு முற்றிலும் சிதைந்துள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு

Date:

திமுக நிர்வாகத்தில் மக்கள் பாதுகாப்பு முற்றிலும் சிதைந்துள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு நடந்த கொடூர தாக்குதலின் அதிர்ச்சி இன்னும் குறையாத நிலையில், அதே பகுதியில் மற்றொரு நபருக்கும் தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தணியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜமால் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட அண்ணாமலை, கடந்த சில ஆண்டுகளாகவே திமுக ஆட்சியில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக விமர்சித்த அவர், திமுக தனது நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொள்ள, இன்னும் எத்தனை சூரஜ்களும், ஜமால்களும் வன்முறைக்கு உள்ளாக வேண்டுமெனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...