நாடு முழுவதும் தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி! – சிவகாசி உற்பத்தியாளர்கள் பெருமிதம்

Date:

நாடு முழுவதும் தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி! – சிவகாசி உற்பத்தியாளர்கள் பெருமிதம்

இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு நடந்துள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டும் பட்டாசு விற்பனை அமோக வெற்றியை பெற்றதால், இந்தாண்டும் உற்பத்தி ஆரம்பம் டிசம்பர் மாதத்திலேயே தொடங்கப்பட்டது. எனினும், வெடி விபத்துகள், சில ஆலைகளுக்கு உற்பத்தி தடை, ஆய்வுத் தாமதம் மற்றும் சிறு ஆலைகளின் வேலைநிறுத்தம் காரணமாக பட்டாசு உற்பத்தி சுமார் 30 சதவீதம் குறைந்தது.

இத்தகைய சூழலிலும், தீபாவளிக்காக 20 புதிய வகை பட்டாசுகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட ரகங்கள் சந்தைக்கு வந்தன. உற்பத்தி தட்டுப்பாடு காரணமாக பேன்சி ரக பட்டாசுகளின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. இருப்பினும், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்த அனைத்து பட்டாசுகளும் விற்றுத் தீர்ந்தன.

தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த தொடர்மழையால் சில்லறை விற்பனை ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டதால் விற்பனை மிகச்சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க (TANPAMA) தலைவர் கணேசன் கூறியதாவது:

“டெல்லி உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியதே இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்க முக்கிய காரணம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் பட்டாசு விற்பனை நடந்துள்ளது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அருணாச்சல் காட்டுத்தீ: விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

அருணாச்சல் காட்டுத்தீ: விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும்...

“ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டது”: போர் விரைவில் முடியும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

"ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டது": போர் விரைவில் முடியும் என அதிபர் டிரம்ப்...

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நள்ளிரவில் செம்மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நள்ளிரவில் செம்மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப்...

தேனீக்களைக் கொல்லாமல் மீட்டெடுக்கும் பணி: தீயணைப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும் ஒத்திகை!

தேனீக்களைக் கொல்லாமல் மீட்டெடுக்கும் பணி: தீயணைப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும்...